Home Blog Page 2

“உன்னைய போய் பெரிய மனுஷன்-ன்னு நெனச்சோமே..” – பவா செல்லத்துரை செய்த சம்பவம்..! விளாசும் ரசிகர்கள்..!

0

பிக் பாஸ் ஏழாவது சீசனில் எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனைவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவருமான பவா செல்லதுரை குறித்து கண்டனங்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் எழுந்திருக்கின்றது.

காரணம் அவர் பேசுவது அனைத்தும் அவருக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு வேறு நியாயம், தனக்கு வந்தால் ரத்தம்.. மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போலத்தான் இருக்கிறது.இந்நிலையில் இவருடைய செயல்களை பற்றி இணைய பக்கங்களில் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் அந்த வகையில் ட்விட்டர் வாசி சூரிய என்ற ஒருவர் தன்னுடைய கடுமையான ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவு தான் இது.

பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த இந்த வாரத்தின் இரண்டாவது நாளில் நடிகர் பிரதீப் பவா செல்லத்துறை-யை பார்த்து, “வீட்டில் கண்ட இடங்ளில் நீங்கள் எச்சை துப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அது மற்றவர்களுக்கு சுகாதாரக் கேடாக இருக்கிறது கண்டிப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்.

அதை வீட்டில் இருந்த அனைவருமே ஆமோதித்தனர்.உடனே பவா அவர்கள், “என் இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது, கடவுளே வந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் நானாக என் இயல்பை மாற்ற முடியாது” என்று ஒரு சுகாதாரமற்ற மொண்மையான ஒரு வாதத்தை வைத்தார்.சம்பவம் 1இரண்டு நாளுக்கு முன் நடந்த விஜய் வர்மா மற்றும் பிரதீப்புக்கும் நடந்த, “நான் அடிப்பேன், நீ அடிப்பேன்” என்று வன்முறையாக பேசிக் கொண்டிருக்கும் போது பவா ஊடால புகுந்து, “விஜய் நீங்கள் பேசியது இங்கு இருக்கிற யாருக்கும் பிடிக்கவில்லை, நீங்கள் செய்வது தவறு என உங்களுக்கு புரிகிறதா? கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

எச்சில் துப்பியது தவறு என அனைவரும் சொன்னபோது மாற்ற முடியாது என்றவர் விஜயை மட்டும் அனைவரின் பேச்சை கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். விஜயிடம் பவா கூறியது சரி என்றாலும் “தனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னி” என்பதாய் இருக்கிறார்.சம்பவம் 2வாரத்தின் முதல் நாளில் “பெண்கள் பிரமாதமாக சமைக்கிறார்கள்” என்று சொல்லாதீர். அவர்கள் அதில் பிக்ஸ் ஆகி விடுவார்கள். பெண்கள் படித்து முன்னேற வேண்டும்” என்று மிகவும் முற்போக்கோடு சொன்னதற்கு நான் உள்பட பலர் ஃபயர் விட்டிருந்தார்கள்.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு விசித்திராவிடம் காபி கேட்டுவிட்டு அவர் தர முடியாது என்றவுடன் பிக்பாஸிடம், “அங்கு வீட்டில் இருக்கும் பெண்கள் பிரமாதமாக சமைக்கிறார்கள் அவர்களை விசித்திர விடவே விடாமல் மொத்தமாக சமையலறையை ஆக்கிரமித்து இருக்கிறார்” என்று முறையிட்டது எவ்வளவு நகைமுரண்.

சம்பவம் 3

சிதம்பர நினைவுகள் என்ற ஒரு பாலியல் அத்துமீறல் கேடுகெட்ட கதையை சொல்லிய போது அப்போது அதற்கு விளக்கம் கேட்டு வந்த ஜோவிகாவிடம், “என்னிடம் விவாதம் வைக்க வேண்டாம். உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் நான் உங்களிடம் விளக்க தேவை இல்லை” என்று இருமாப்போடு சொன்னார்.

ஆனால் அதே சமயம் விசித்திராவுக்கும் ஜோவிகாவுக்கும் பிரச்சினை வரும்போது விசித்ராவிடம் “ஜோவிகா எவ்வளவு பவ்யமாக கையைத் தூக்கி கேட்கிறார். நீங்கள் மரியாதையாக அவருக்கு பதில் சொல்ல வேண்டும் அல்லவா?’ என்கிறார். ஆனால் இவர் அதை செய்யமாட்டாராம். அடுத்தவருக்கு மட்டும் அநியாய அறிவுரை

சம்பவம் 4

தற்போது மிக முக்கியமான சம்பவத்தை சொல்கிறேன். விவாத பொருளாக ஆகி இருக்கிற ஜோவிகா விசித்திரா கல்வி பற்றிய உரையாடலில், “படிப்பு முக்கியமில்லை, படிச்சிதான் முன்னேறனுமா?. என்றும் நீட் தேர்வுக்கு ஆதரவாக, “எல்லோரும் டாக்டர் ஆனா யார் தான் கம்பவுண்டர் ஆவது?” என்று ஜோவிகா பேசிய போது மிக உணர்ச்சிகளோடு மிக ஆதரவாக கைதட்டி உற்சாகப்படுத்துகிறார் பவா. காமராஜர் கமல் எல்லாம் படித்தார்களா? படிப்பு முக்கியமில்லை” மிக அபத்தமாக சொல்லி அதற்கு மேலும் வலு சேர்க்கிறார்

குரலற்றவர்களின் குரலாக இருப்பார் என்று நினைத்த இந்த முற்போக்கு எழுத்தாளர் மிகவும் பிற்போக்குவாதியாக அம்பலப்பட்டு நிற்கிறார். கல்வி எவ்வளவு முக்கியம். இவரின் குரல் குலக்கல்விக்கு ஆதரவாக இருக்கிறது.

இந்த பிரச்சினை கூட அவருக்கு விசித்திராவுக்கும் இருந்த தனிப்பட்ட பிரச்சனையை வைத்து விசித்திராவுக்கு எதிராக பேச வேண்டும் என்று வன்மத்தை மனதில் வைத்து கல்விக்கு எதிராக குரல் எழுப்புகிறார் பவா.

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அப்புறம் இவர் என்ன முற்போக்கு? இவரும் ஒரு சாதாரண மனிதர் தானே? இவரின் எழுத்திற்கும் இவரின் உண்மை முகத்திற்கும் சம்மந்தமே இல்லை. இவரையும் கொண்டாடி இருக்கிறோம் என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது

கண்டிப்பாக இந்த பிக் பாஸ் என்ற சுவர் முற்போக்கு எழுத்தாளர் என்ற போர்வையில் இருக்கும் பவா செல்லத்துரை முகத்திரையை கிழித்து தொங்கவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கல்வி சர்ச்சை..! – கமல் கேட்ட ஒரு கேள்வி..! – விழி பிதுங்கிய வனிதா மகள் ஜோவிகா..!

0

கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு பிரச்சனை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் படிப்பு குறித்த தற்குறித்தனமான பேச்சு தான்.

எனக்கு படிப்பு வரவில்லை அதனால் ஒன்பதாம் வகுப்பு நின்று விட்டேன். அதன் பிறகு நடிப்பில் ஒரு டிப்ளமோ படித்து வைத்திருக்கிறேன் என்று கூறினார் ஜோவிகா. இந்த காலத்தில் ஒரு 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினார் நடிகை விசித்ரா.

நேற்று நடந்த ஒரு டாஸ்கின் போது இந்த விவகாரம் சம்பந்தமே இல்லாமல் விஸ்வரூபம் எடுத்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து சொல்ல நீங்கள் யாரென்று ஆரம்பித்த ஜோவிகாவின் பேச்சு ஒரு கட்டத்தில் படிப்பு இருந்தால் தான் வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது.. படிக்க முடியவில்லை என எத்தனையோ பேர் தவறான முடிவு எடுத்துக் கொள்கிறார்கள் அவர்களுடைய சார்பாக தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்று ஏக வசனம் பேசினார்.

இதை இணைய வட்டாரத்தில் பேசுபொருளானது. படிப்பு தேவையில்லை என்பதை Normalize செய்ய இந்த நிகழ்ச்சி முயன்றால் அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் இந்த விவகாரத்தில் என்ன கருத்து கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சற்று முன்பு வெளியான ப்ரோமோவில் இதற்கான விடையை கொடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அவர் கேட்ட ஒரு கேள்வியில் ஜோவிகா ஒரு நிமிடம் உறைந்து போனார். கமல்ஹாசன் கேட்ட கேள்வி என்னவென்றால், நீங்கள் எப்போதாவது கல்வி முக்கியமில்லை என்று கூறி இருக்கிறீர்களா..? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளிக்காமல் அமர்ந்திருந்த ஜோவிகா. நான் அப்படி கூறியது இல்லை என்று சொல்ல முற்படுவார் போல் தெரிகிறது.

ஆனால் கல்வி முக்கியமில்லை, கல்வி இல்லாமல் ஒருவரால் ஜெயிக்க முடியும் என்பது தான் ஜோவிகாவின் வாதமாக அவருடைய கருத்தின் அடி நாதமாக இருந்தது.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் நீங்கள் விசித்ராவின் கருத்தை புரிந்து கொள்ளவில்லை. இது இரண்டு தலைமுறைக்கான இடைவெளி. விசித்ரா கூறியதில் எந்த தவறும் கிடையாது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் படிப்பு முக்கியம் அதே சமயம் படிப்பிற்காக உயிரை விட்டு படிக்க வேண்டும் என்ற அந்த அவசியமும் கிடையாது. கற்றல் விதி இருக்கலாம் ஆனால் கற்றல் வதை இருக்கக் கூடாது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு 20 வயது ஆன ஒரு பெண் என்பதால் ஜோவிகாவை இந்த விஷயத்தில் இதற்கு மேற்கொண்டு ஏதேனும் அழுத்தமாக அவருடைய கருத்தை திட்டவோ திருத்தவோ செய்தால் அது சரியாக இருக்காது என்பதால் அவருடைய வயதுக்கு ஏற்றார் போல தன்னுடைய கருத்தை பக்குவமாக பதிவு செய்திருக்கிறார் கமல்ஹாசன் என்று பார்க்க முடிகிறது.

இதை எதிர்பார்க்கவே இல்ல.. இந்த வாரம் Evict ஆனது யாருன்னு பாருங்க..! – பிக்பாஸ் 7 அப்டேட்..!

0

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லா வரவேற்பு பெற்று இருக்கிறது. தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தான்.

வேறு எந்த நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் இந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைத்திருக்குமா..? என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.வாரம் முழுதும் பிக் பாஸ் பார்க்காத ரசிகர்கள் கூட வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் தோன்றக்கூடிய அந்த எபிசோடுகளை பார்த்து விடுவார்கள். அந்த அளவுக்கு, ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கக் கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஒன்றாம் தேதி ஆரம்பமான இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கலை கட்டியிருக்கிறது. இந்நிலையில், முதல் வாரம் வெளியேறப் போவது யார்..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெரும்பான்மையாக அனன்யா ராவ் தான் வெளியே செல்வார் என்று பேசி வந்தனர். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை, வெப் சீரிஸ் நடிகர் பிரதீப் ஆண்டனி, நடிகை அனன்யா ராவ், நடிகை ரவீனா தாஹா, ஐசு, பிரபல பாடகரும் நடிகருமான யுகேந்திரன் மற்றும் ஜோவிகா உள்ளிட்டா ஏழு பேர் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

இந்நிலையில், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கக்கூடிய அனன்யா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்றும் அவருக்கு தான் குறைந்தபட்ச வாக்குகள் கிடைத்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்பொழுது பாடகரும் நடிகருமான யுகேந்திரன் வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து உண்மை தகவல் என்னவென்று ஆண்டவர் அந்த கார்டை எடுத்துக் காட்டினால் தான் தெரியவரும்.

பிக்பாஸ் வனிதா மகள் ஜோவிகா-வின் தற்குறித்தனமான பேச்சு..! – விஜய் டிவி கோபிநாத் பதிலடி..!

0

பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சியில் அடிப்படை கல்வி குறித்தான விவாதம் எழுந்திருக்கிறது பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை என்பதால் ஒன்பதாம் வகுப்பிலேயே என்னுடைய படிப்பை நான் நிறுத்தி விட்டேன்.

அதன் பிறகு நடிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறேன் என்று பேச்சுவாக்கில் கூற அதனை கேட்ட விசித்திரா கண்டிப்பாக ஒரு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதுதான் உன்னுடைய எதிர்காலத்துக்கு சிறப்பாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தை கூறியிருந்தார்.

அதன் பிறகு பாடகரும் நடிகருமான மகேந்திரன் ஒரு டிகிரியாவது வாங்கி வைத்திருக்க வேண்டும் நடிப்பு துறையில் பல்வேறு டிகிரி படிப்புகள் இருக்கின்றன ஏதாவது ஒரு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுதான் நன்றாக இருக்கும்.

ஏனென்றால் இன்று நீங்கள் நடித்து விடலாம்.. ஆனால் நாளை உங்களால் படிக்க முடியாது.. நீங்கள் பழகக் கூடிய அனைவருமே நன்கு படித்து இருப்பார்கள். அந்த இடத்தில் நீங்கள் மட்டும் தான் பள்ளி படிப்பு கூட முடிக்காத ஒரு நபராக இருப்பீர்கள் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருவதற்கு அது காரணமாக அமைந்து விடும் என்ற கோணத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து மிகப்பெரிய சச்சரவு வெடித்திருக்கிற. படித்தால் தான் முன்னேற முடியும் என்ற எந்த சட்டமும் கிடையாது.. படிப்பு வராமல் பலர் தவறான முடிவு எடுத்துக் கொள்கிறார்கள்.. அவர்களின் சார்பாக தான் நான் வந்திருக்கிறேன் என ஏக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் ஜோவிகா.

இவருடைய கருத்துக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய சினிமா பின்புலம், பண பலம் என அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு பெண் படிப்பு வரவில்லை என்றால் நடிக்க சென்று விடுவார்.

ஆனால் சாதாரண நடுத்தர வர்க்க மக்கள் என்ன செய்வார்கள்..? ஒரு ஏழை என்ன செய்வான்..? என்ற கேள்விகளை ஜோவிகாவை நோக்கி வீசி வருகின்றனர்.

20 வயதில் தன்னுடைய எல்லையை மீறி பேசிக் கொண்டிருக்கிறார் ஜோவிகா என்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ஜோவிகாவின் இந்த பேச்சுக்கு நடிகர் கோபிநாத் ஏற்கனவே பேசியிருந்த ஒரு வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள். அந்த வீடியோ இதோ,

ஆண்டவரே.. நவ் யுவர் டர்ன்..! – அடிப்படை கல்வி சர்ச்சை.. கமல்ஹாசன்-ஐ குறி வைக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்..!

0

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கலை காட்டி இருக்கிறது.முதல் வாரத்திலேயே விவகாரமான பஞ்சாயத்து ஒன்று பிக்பாஸ் வீட்டில் நடந்தேறி இருக்கிறது. இந்த பஞ்சாயத்திற்கு பஞ்சாயத்து தலைவர் கமல்ஹாசன் என்ன தீர்ப்பு கொடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

அது என்ன பஞ்சாயத்து என்றால்,.. அதுதான் கல்வி குறித்தான விவாதம். எனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நான் நம்பவில்லை என்று தற்குறித்தனமாக பேசும் ஜோவிகா ஒரு பக்கம்.

அடிப்படை கல்வி ஒரு 12-ஆம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும் உன்னுடைய நலம் விரும்பிகள் உன்னுடைய தாயாக இருந்தாலும் அதைத்தான் கூறுவார். நான் சொன்னதில் என்ன தவறு..? என்று வெள்ளந்தியாய் நிற்கும் நடிகை விசித்ரா மறுபக்கம்.

இதில் கூத்து என்னவென்றால் தற்குறித்தனமாக பேசக்கூடிய ஜோவிகாவிற்கு ஆதரவாக பல பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுடைய கைத்தட்டல்களை கொடுத்திருக்கின்றனர். ஒட்டு மொத்த பிக்பாஸ் வீடே தற்குறிகளின் கூடாரமாகி விட்டதா.. என்று புலம்புகின்றனர் ரசிகர்கள்.

படிக்காத மேதை காமராஜர் என்று கூறுகிறோம். ஆனால், அந்த காமராஜரே ஊர் முழுக்க பள்ளிகளை திறந்தது எதற்காக..? அடிப்படை கல்விக்காக பல ஆண்டுகள் போராடி அனைவருக்கும் கல்வி என்ற நிலையை எட்டி இருக்கும் இந்த காலத்தில் படிப்பு இருந்தால் தான் சாதிக்க முடியும் என்ற எதுவும் கிடையாது என்ற தற்குறித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் பணக்கார பெண்ணான ஜோவிகாவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒரு நடிகையின் மகள், மிகப் பெரிய சினிமா குடும்பத்தின் வாரிசு உங்களிடம் இல்லாத பணம் கிடையாது. பிரபலம் என்ற அடிப்படையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எளிமையாக கிடைத்துவிட்டது.

ஆனால் சாமானியர்களுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறது..? அவர்கள் படித்தால் தான் அவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.. ஒரு வேலை கிடைக்கும்.. ஒரு தொழிலை துவங்குவதற்கான அடிப்படை அறிவு கிடைக்கும்.. ஆனால் நீங்கள் படிக்காமல் முன்னேற முடியும் என்று சொல்லுவதற்கு எந்த நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்..? என்று ஜோவிகாவிற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஜோவிகாவின் இதே பேச்சை படிக்காமல் சாதித்த ஒருவர் பேசுகிறார் என்றால் அதனை காது கொடுத்து கேட்கலாம். ஆனால், தற்போது தான் 20 வயதாகும் ஒரு பெண் இப்படி மமதையில் பேசுவதை கேட்க காது கூசுகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசன் என்ன கூற போகிறார்…? என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வேறு எந்த பிக் பாஸ் போட்டியிலும் இல்லாத அளவுக்கு முதல் வாரமே இப்படி ஒரு பஞ்சாயத்து.. பலராலும் கவனிக்கப்படும் ஒரு பஞ்சாயத்து உருவாகி இருக்கும் சீசன் இந்த 7-வது சீசன் தான் என்று கூறலாம்.

உனக்கு படிப்பு வரலனா.. சினிமாவுக்கு போயிடுவ.. நாங்க என்ன பண்றது.. தற்குறி ஜோவிகா-வை விளாசும் ரசிகர்கள்..!

0

பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கக்கூடிய வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை என்றும் அதனால் நடிப்பில் டிப்ளமோ முடித்து வைத்திருக்கிறேன்.

ஒன்பதாம் வகுப்போடு படிப்பதை நிறுத்தி விட்டேன் என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து சக பிக் பாஸ் போட்டியாளர்கள் விசித்திரா மற்றும் மகேந்திரன் இருவரும் பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் ஒரு டிகிரி ஆவது கையில் வைத்திருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்தனர்.ஆனால் என்னை படிக்க சொல்ல நீங்கள் யார்..? படிப்பு இருந்தால்தான் வாழ்க்கையா..? படிக்க முடியவில்லை என்று நிறைய பேர் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்களின் சார்பாக தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்று ஏக வசனம் பேசுகிறார்.

இதில் கொடுமை என்னவென்றால் ஜோவிகா-வின் இந்த பேச்சுக்கு பல பிக்பாஸ் போட்டியாளர் கை தட்டி ஊக்கம் கொடுக்கிறார்கள்.அப்படி கை தட்டுபவர்கள் தங்களுடைய குழ்னதைகளை பள்ளிக்கு அனுப்பாமல் விட்டு விடுவார்களா..? அடிப்படை கல்வியை கூட கொடுக்க மாட்டார்களா..? என்ற கேள்வி எழும்புகிறது.ஜோவிகா கூறிய கேட்ட ரசிகர்கள் நீங்கள் சினிமா பின்புலம் கொண்டவர்க.. படிப்பு வரவில்லை என்றால் சினிமா பக்கம் சென்று பணம் சம்பாதித்து கொண்டு செட்டில் ஆகிவிடுவீர்கள்… பிரபலத்தின் மகள் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டீர்கள்..ஆனால் ஒரு நடுத்தர வர்க்கத்தினர் ஏழாயை குடும்பத்தினர் படித்தால் தான் அவர்களுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அவருக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும், அல்லது அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கக்கூடிய திறமை கிடைக்கும்.

அப்படி இருக்கும் பொழுது ஒரு சினிமா பின்புலத்தை வைத்துக்கொண்டு மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் குடும்பத்தில் இருந்து வந்துவிட்டு நான் படிக்கவில்லை படித்தால் தான் வாழ்க்கை என்று நான் நம்பவில்லை.. என்று நீங்கள் கூறிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து நடிகர் கமலஹாசன் என்ன கருத்து சொல்ல போகிறார் இந்த விவகாரத்தையும் நீட் தற்கொலை விவகாரத்தையும் கோர்த்து விட்டு ஏதேனும் அரசியல் விளையாட்டு விளையாடு அல்லது நிதர்சனத்தை பேசுவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடிப்படை கல்வி அனைவருக்கும் வேண்டும் என போராடியது நம் சமுதாயம்… இடைநிற்றல் வந்து விடக்கூடாது என்பதால் பத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று சுமாராக படித்தாலும்… பத்தாம் வகுப்பு வரை அவர்களின் கையை பிடித்து அழைத்து சென்று உலகை காட்ட வேண்டும் என்று பயணித்து கொண்டிருப்பது நம் சமுதாயம்..

ஆனால், இங்கே தற்குறித்தனமாக படித்தால் தான் சாதிக்க முடியுமா..? என மிகப்பெரிய பண பலம் மற்றும் திரை பிரபலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண் பேசுகிறார்.

அதற்கு, சக பிக்பாஸ் போட்டியாளர்கள் கை தட்டி ஆதரவு கொடுகிறார்கள். இந்த விவகாரத்தை எப்படி புரிந்து கொள்வது..? உங்களுடைய கருத்தை தவறாமல் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.. பேச்சு வாக்கில் லியோ கதை கூறிய லோகேஷ் கனகராஜ்..!

0

லியோ திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

படத்தின் பிரமோஷனுக்காக இந்த பேட்டியில் கலந்து கொண்டிருக்கும் இவர் பேசி உள்ள சில விஷயங்கள் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.. என்று ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.அவை என்ன தகவல் என்று பார்க்கலாம். முதலில் படத்தின் தயாரிப்பாளர் லலித் தன்னிடம் ஜெயிலர் படத்தின் வசூலை எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று கூறினார் என வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த விவகாரம் இணைய பக்கத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. ஜெயிலர் வசூலை மிஞ்ச வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற பேச்சும் ரஜினிக்கு போட்டி விஜய்-யா என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.

இது ஒரு பக்கம் இருக்க லியோ திரைப்படம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு லியோ திரைப்படம் கைதி திரைப்படம் போல இருக்கும் என்று வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

இதன் மூலம் அப்பா மகள் சென்டிமென்ட் இந்த படத்தில் பிரதானமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிரெய்லரை வைத்து படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என பல்வேறு கதைகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அதில் பிரதானமான பங்குபெறும் ஒரு விஷயம் என்றால் அப்பா மகள் இடையே இருக்கும் சென்டிமென்ட் தான். இந்நிலையில் லோகேஷ் கனகராஜன் கைதி திரைப்படம் போலத்தான் லியோ திரைப்படமும் இருக்கும் என்று கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் என்ன படத்தின் கதையை அப்படியே வெளியில் சொல்லிவிட்டார் என்று பேச்சு எழ காரணமாக அமைந்துள்ளது.

என்னை வற்புறுத்தி அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வைத்தார்கள்..! – முதல்வரின் பேத்தி பகீர் பேட்டி..!

0

காதல் மன்னன் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை மானு சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் மன்னன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

காதல் மன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கும் நடிகை மானுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தான்.இந்த படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

சிங்கப்பூரில் செட்டிலாகி விட்ட இவர் 16 ஆண்டுகள் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் மன்னன் படம் குறித்து பேசியுள்ளார்.அவர் பேசியதாவது, காதல் மன்னன் திரைப்படத்தில் நான் நடிக்க மறுத்தேன் எனவும் என்னுடைய குடும்பத்தில் யாருமே சினிமா துறையில் கிடையாது. என்னுடைய தாத்தா கோபிநாத் பட்டோலால் அசாம் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.

என்னுடைய குடும்பத்தில் அனைவரும் மருத்துவர்கள். படிப்பதற்காக தான் நான் சென்னை வந்தேன். அப்போது என்னுடைய பள்ளியில் படித்துக் கொண்டிருந்த விவேக் மற்றும் சரண் இருவரும் என்னை கட்டாயப்படுத்தி நடிகர் அஜித்துக்கு ஜோடியாக காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்கள்.

அந்த படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டேன் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஆனால், அவை எதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. படிப்பில் கவனம் செலுத்து தொடங்கினேன்.

பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். என்னுடைய கணவரும் ஒரு மருத்துவராக தான் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகை மானு. காதல் மன்னன் படத்தில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரை பலரும் திலோத்தமா என்று அடையாளம் கொண்டிருக்கின்றனர்.

லியோ ட்ரெய்லர்..! – வானதி சீனிவாசன் அதிரடி பதிவு..!

0

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த ட்ரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் குறித்து கடுமையான சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கிறது.

குடும்ப ரசிகர்களை அதிகம் பெற்றுள்ள நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய்யும் ஒருவர். நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு குடும்பங்கள் சகிதமாக படத்திற்கு செல்லும் ஒரு ஹீரோவின் படம் என்றால் அதை விஜய் படங்கள்தான்.

அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தில் இப்படியான கொச்சையான வார்த்தை.. பெண்களை இழிவு படுத்தும் விதமாக வசனங்கள் தேவையா..? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் லியோ ட்ரெய்லரை தன்னுடைய வீட்டில் உள்ள டிவியில் கண்டு ரசித்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படம், நேற்று மாலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த ட்ரெய்லர் குறித்து உங்களுடைய கருத்து என்ன..? என்று அவருடைய பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதிரடி பதிவு..!

ஆனால் இதுவரை ட்ரெய்லர் குறித்து திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் எந்த ஒரு விமர்சனத்தையும் பதிவு செய்யவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

லிப்-லாக்.. பொட்டு துணி இல்லாமல் தூங்கும் அறை காட்சி.. நடிகை சுனைனா கொடுத்த பதிலை பாருங்க..!

0

படுமோசமான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடிகை சுனைனா சமீப காலமாக நடித்து வருகிறார்.

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலையிட்டால் மிகப் பெரிய வெற்றி பலமாக மாறியது.இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்தன. இந்த படத்தை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர் பறவை, தெரி, சமர், சில்லு கருப்பட்டி, லத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சுனேனா.

கடைசியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்கரியிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை சுனைனா சமீபத்தில் நடித்த வெப்சீரிஸ் ஒன்றில் பொட்டு துணி இல்லாமல் வெறும் போர்வையை மட்டும் போர்த்திக்கொண்டு படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்த அதிர வைத்திருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை சுனைனா இப்படியான காட்சிகளில் நடிப்பதை நான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒரு நடிகையாக நடிக்க வேண்டியது என்னுடைய கட்டாயம். நடிப்பு என்பது என்னுடைய வேலை, நடிப்பு என்பது என்னுடைய உணர்வு, படப்பிடிப்பு தளத்துக்கு சென்றால் நடிப்பேன். படப்பிடிப்பு தளத்திலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு நான் நானாக இருப்பேன்.

படத்தை பார்ப்பவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கலாம். அந்த படத்தின் கதையில் நடிக்க நாம் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதுபோல நடிக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் என்னுடைய கடமையை செய்திருக்கிறேன். அது வெறும் நடிப்பு மட்டும் தான் என்று எனக்கு தெரியும் எனக்கு கூறியிருக்கிறார் நடிகை சுனைனா.