Home Blog

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.. பேச்சு வாக்கில் லியோ கதை கூறிய லோகேஷ் கனகராஜ்..!

0

லியோ திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

படத்தின் பிரமோஷனுக்காக இந்த பேட்டியில் கலந்து கொண்டிருக்கும் இவர் பேசி உள்ள சில விஷயங்கள் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.. என்று ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

அவை என்ன தகவல் என்று பார்க்கலாம். முதலில் படத்தின் தயாரிப்பாளர் லலித் தன்னிடம் ஜெயிலர் படத்தின் வசூலை எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று கூறினார் என வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த விவகாரம் இணைய பக்கத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. ஜெயிலர் வசூலை மிஞ்ச வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற பேச்சும் ரஜினிக்கு போட்டி விஜய்-யா என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.

இது ஒரு பக்கம் இருக்க லியோ திரைப்படம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு லியோ திரைப்படம் கைதி திரைப்படம் போல இருக்கும் என்று வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

இதன் மூலம் அப்பா மகள் சென்டிமென்ட் இந்த படத்தில் பிரதானமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிரெய்லரை வைத்து படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என பல்வேறு கதைகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அதில் பிரதானமான பங்குபெறும் ஒரு விஷயம் என்றால் அப்பா மகள் இடையே இருக்கும் சென்டிமென்ட் தான். இந்நிலையில் லோகேஷ் கனகராஜன் கைதி திரைப்படம் போலத்தான் லியோ திரைப்படமும் இருக்கும் என்று கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் என்ன படத்தின் கதையை அப்படியே வெளியில் சொல்லிவிட்டார் என்று பேச்சு எழ காரணமாக அமைந்துள்ளது.

“16 வயசுல இப்படி நடக்கும்-ன்னு தெரிஞ்சிருந்தா…” – விஜய் ஆண்டனி மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..!

0

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரணைகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் மீரா என்றும் அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது.மீராவின் மரணம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் என்பது தான்.

கல்வி குறித்தும், தற்கொலை என்பது தவறான முடிவு என்றும் பல்வேறு தளங்களில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கும் விஜய் ஆண்டனியின் வீட்டில் இப்படி ஒரு சம்பவமாக என்று பலரும் வேதனை கொண்டார்கள்.இந்த விவகாரம் ஒட்டுமொத்த சினிமா உலகினரையும் உலுக்கியது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில், மீராவின் மறைவு குறித்து அவருடைய தாய் ஃபாத்திமா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

நீ 16 வயதில் இறந்து விடுவாய் என தெரிந்திருந்தால்.. உன்னை சூரியனிடமும் சந்திரனிடமும் காட்டாமல் என்னுடைய வைத்திருந்திருப்பேன்.. அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் திரும்பி வந்துடுமா… உனக்காக லாரா காத்துக் கொண்டிருக்கிறாள்.. என உருக்கமான வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உடைந்து போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இஒதனை தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறியும் இந்த நேரத்தில் நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

லியோ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..! – கிடுக்கு பிடியால் திணறும் படக்குழு..!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிரி கிடக்கிறது.

அதே சமயம் வேறு எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப அனுமதிக்க மறுத்து இருக்கிறது அரசு.

ஏனென்றால், துணிவு வாரிசு சிறப்பு காட்சிகள் பொழுது ஏற்பட்ட விபத்துக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போனது. கூட்ட நெரிசல் போன்ற காரணங்களினால் அதிகாலை காட்சிகளை அனுமதி மறுத்துள்ளது அரசு.

இது படக்குழுவுக்கு மிகப்பெரிய வசூல் இழப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் படத்தை ஒரு நாள் முன்கூட்டியே வெளியிடப்பட திட்டமிட்டு இருக்கிறது என கூறுகிறார்கள்.

அதன்படி 18 ஆம் தேதியே லியோ திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19ஆம் தேதி வெளியாகும் லயோ திரைப்படம் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை 21-ஆம் தேதி சனிக்கிழமை 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23,24 ஆயுத பூஜை விடுமுறை ஆறு நாட்கள் தொடர்ந்து வசூலை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் வரும் பொழுது அதிகாலை காட்சிகள் ஒளிபரப்புக்கு அனுமதி கிடைக்காததனால் படத்தை 18 ஆம் தேதியே வெளியிடுவது என்ற முடிவில் இருப்பதாக பட குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“LEO” சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தது..! – அரசாணையில் இருந்த வார்த்தையால் வெடித்த சர்ச்சை..!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து படத்தை 18-ம் தேதியே வெளியிடலாமா..? என படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு.இந்த அனுமதிக்கான கடிதத்தில் நடிகர் விஜயின் பெயரை “தளபதி விஜய்” என்று குறிப்பிட்டு இருக்கிறது அரசு தரப்பு.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மறுபக்கம் பொதுவான இணையவாசிகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.ஒரு அரசு தரப்பு வெளியிடக்கூடிய ஆணையில் இப்படி தனி நபர் துதி பாடக்கூடிய விதமாக வார்த்தைகளை இடம்பெற செய்வது எந்த வகையில் நியாயம்..? என்ற கேள்விகள் எழுப்பி வருகின்றது.

ஒரு பக்கம் இருக்க, திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி கிடைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் ஆழ்ந்திருக்கும் நிலையில் மறுபக்கம் நடிகர் விஜயின் பெயரை தளபதி விஜய் என அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

லியோ – படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..? – திரை விமர்சனம்..!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது.

இதற்கு முன்பாக தணிக்கை குழு அதிகாரிகள் மற்றும் லியோ படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் உள்ளிட்டோர் லியோ திரைப்படத்தை பார்த்திருக்கின்றனர்.

இது குறித்து தங்களுடைய கருத்துக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், லியோ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் லியோ திரைப்படம் குறித்து தன்னுடைய பார்வையை எமோஜிக்கள் வடிவில் பதிவு செய்திருக்கிறார்.

ஏனென்றால் படம் வெளியாவதற்கு முன்பு அவர் கூறக்கூடிய எந்த வார்த்தையும் படத்திற்கு ஸ்பாய்லராக அமைந்து விட வாய்ப்பு இருக்கிறது. எனவே எமோஜிக்களை கொண்டு தன்னுடைய விமர்சனத்தை கொடுத்திருக்கிறார் அனிருத்.

இது ஒரு பக்கம் இருக்க லியோ திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் கூறியது என  ஒரு தகவல் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

உறுதிப்படுத்தப்படாத இந்த தகவல் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் அளவிற்கு வைரலாகி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அதில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது என்பதையும் தான் பார்த்து விடுவோமே..! அதில் கூறியுள்ளதாவது,  படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் நடிகர் விஜயின் கெட்டப் அவருக்கு பொருந்தவில்லை.

படத்தின் முதல் 50 நிமிடங்கள் மிகவும் மெதுவாக நகர்கின்றன. குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் நீண்டு கொண்டு போவது சலிப்பு தட்டுகிறது.

நடிகர் அர்ஜுனின் ஆக்சன் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. துரதிஷ்டவசமாக அனிருத்தின் இசை பெரிய அளவில் உதவி செய்யவில்லை. படத்தின் கதைக்கும் அது நடக்கும் இடத்திற்கும் சம்பந்தமே சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.. என்று தணிக்கை குழு அதிகாரிகள் கூறியதாக உறுதிபடுத்தப்படாத தகவல் இன்று காலை முதல் பல ட்வீட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ட்வீட்டுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கும் ஆகி இருக்கின்றது. இன்னும் ஒரு வாரமே படம் வெளியாக உள்ள நிலையில் லியோ படத்தின் மீதான காய்ச்சல் அதிகரித்திருப்பதை இப்படியான தகவல்கள் பரவுவதை கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிறது நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம். சரியாக 2013-ம் வெளியான தலைவா திரைப்படத்திற்கு தான் இப்படி விண்ணை முட்டும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதன் பிறகு, வழக்கமான விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பையே உணர முடிந்தது. ஆனால், தற்போது விஜய்யின் அரசியல் பிரவேஷம், அவரது தனிப்பட்ட அரசியல் நகர்வுகள், ரசிகர் மன்றங்களுக்கு புத்துயிர் ஊட்டியது, விஜய்க்கு இருக்கும் அரசியல் அழுத்தங்கள் என அனைத்தும் சேர்ந்து லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்ட செய்துள்ளது என்று கூறலாம்.

ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்புக்கு லியோ ஈடு கொடுக்குமா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வனிதா மகள் ஜோவிகா-வின் கல்வி குறித்த பேச்சு..! – நடிகர் தனுஷ் பதிலை பாருங்க..!

0

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா படிப்பு என்பது முக்கியம் கிடையாது படிப்பு இல்லை என்றாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று ஏக வசனம் பேசி இருந்தார்.

இவருக்கு வயது வெறும் 20 தான் ஆகிறது. ஒரு 20 வயது ஆகும் பெண் வயதில் பெரியவர்களை மதிப்பது கிடையாது. ஒரு நல்ல விஷயத்தை சொன்னால் அதனை ஏதோ பெரிய குற்றம் போல அவர்களிடம் சண்டை போடுவது.. இது எல்லாம் என்ன பழக்கம்..? கல்வி இல்லாமல் என்ன இருக்கிறது…? என அடிப்படைக் கல்வியே தேவையில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் ஜோவிகாவுக்கு கண்டனங்கள் எழுந்தன.இது ஒரு பக்கம் இருக்க படிப்பு முக்கியம் கிடையாது. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று ஜோவிகாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்த ரசிகர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

ஆனால் அந்த திறமையை வெளிப்படுத்த அடிப்படையான கல்வி என்பது அவசியம் என பலராலும் வாதிடப்பட்டது.இந்நிலையில், நடிகர் தனுஷ் படிப்பின் முக்கியத்துவத்தை பேசும் விதமாகவும் படிப்பு இல்லாததால், தான் பட்ட அவமானங்கள் குறித்தும் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் படிப்பு குறித்த பேசிய ஒரு வீடியோ காட்சியை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

ஏற்கனவே நீயா நானா கோபிநாத் கல்வி குறித்து பேசிய வீடியோ வைரலான நிலையில் தற்போது நடிகர் தனுஷின் இந்த வீடியோவை வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் தனுஷ், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாது. ஆனால், தற்பொழுது பழமொழிகளில் சரளமாக பேசுகிறேன்.

பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நடிக்க வந்ததால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. எனவே என்னால் பட்டப்படிப்பு படிக்க முடியாமல் போய்விட்டது.

இதனை நினைத்து நான் வருந்தாத நாளே கிடையாது. சினிமாவில் அறிமுகமான பொழுதில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என வெளியே எங்கு சென்றாலும் அந்த இருப்பவர்கள் பலரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள்.

ஆனால் அந்த இடத்தில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவித்து இருக்கிறேன். நாம் படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு அந்த இடத்தில் ஏற்பட்டது.

அதைவிட, நாலு பேர் இருக்க கூடிய இடத்தில் நான் டிகிரி கூட படிக்கவில்லை என்று சொல்லி கிண்டல் செய்து இருக்கிறார்கள். நாளை உங்கள் திறமையால் நீங்கள் வாழ்க்கையில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால், உங்கள் கையில் ஒரு டிகிரியாவது இருக்க வேண்டும். அதுதான் சிறப்பாக இருக்கும் என பேசி இருக்கிறார் நடிகர் தனுஷ். இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

400 X 4 எவ்ளோ..? – வனிதா மகள் ஜோவிகா பதிலால் கிறுகிறுத்து கிடக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்..!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த விஷயம் பிக் பாஸ் ரசிகர்களை தாண்டி பொதுவான இணையவாசிகளாலும் பொதுமக்களாலும் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் அது வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் கல்வி குறித்த பேச்சு தான்.

அடிப்படை கல்வி குறித்த தவறான புரிதலில் தற்குறித்தனமான தன்னுடைய பதிவை பிக் பாஸ் வீட்டில் பதிவு செய்திருந்தார் ஜோவிகா.

படித்து தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது படிப்பு வராததால் தவறான முடிவு எடுத்துக் கொள்ளும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் அவர்களுடைய முகமாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்னால் ஜெயிக்க முடியும் என்று ஏக வசனம் பேசினார்.

ஆனால், இவருடைய வசனம் எதுவுமே நிதர்சனத்திற்கு ஒத்து வராது. நீங்கள் ஒரு சினிமா நடிகையின் மகள் படிப்பு வரவில்லை என்றால் நடிகையாகி விடுவீர்கள். சாதாரண ஆட்கள், நடுத்தர வர்க்கத்தினர் படிப்பு வரவில்லை என்று படிக்க வில்லை என்றால் என்ன செய்வார்கள்..? என்று ஜோவிகா-வின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது 400-ஐ 4-ஆல் பெருக்கினால் எவ்வளவு கிடைக்கும்..?

ஒரு வழியாக இந்த சர்ச்சை முடிந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது 400-ஐ 4-ஆல் பெருக்கினால் எவ்வளவு கிடைக்கும்..? என்ற கேள்விக்கு 800 என்ற பதில் அளிக்கிறார் விஜய். இதற்கு மறுப்பு தெரிவிக்காத ஜோவிகா இன்னும் 400 கிராம் போடுங்க.. என்று கூறுகிறார்.. இதனை பார்த்த ரசிகர்கள் இதற்குத்தான் அடிப்படை கல்வி முக்கியம் என்பது என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் பண்ற வேலையா இது..? – இரண்டு போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ்..!

0

பிக் பாஸ் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று முதல் வாரத்தில் ரசிகர்களை கவர தவறியவர்கள் என்ற அடிப்படையில் இரண்டு போட்டியாளர்களுக்கு சிறை தண்டனை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேச வேண்டும். ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

ஆனால் சிலர் ஏன் வந்தோம் என்று கூட தெரியாமல், ஆள் எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியாமல், கூட்டத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை அக்ஷயா மற்றும் நடிகை வினுஷா ஆகிய இருவரையும் சிறையில் அடைத்து உத்தரவிட்டிருக்கிறார் பிக்பாஸ்.

இருவரும் எந்த பிரச்சினைகளும் தலையிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று பாதுகாப்பாக தங்களுடைய விளையாட்டை விளையாடி இருக்கிறார்கள். இது பிக் பாஸ் வீட்டில் தவறான ஒரு விஷயம்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் தங்களுடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும். தங்களுடைய பார்வையை அங்கே விளக்க வேண்டும்.

இப்படி இருக்கும் பொழுது யார் எப்படி போனால் என்ன… என்று வாரம் முழுதும் எஸ்கேப் ஆன இருவருக்கும் பிக்பாஸ் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அப்பா அம்மா-வின் அந்த இழப்பு.. காதல் தோல்வி.. மனநோயாளி.. பிக்பாஸ் பிரதீப்-ன் திகில் பக்கங்கள்..!

0

தமிழில் அருவி, டாடா மற்றும் வாழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் பிரதீப் ஆண்டனி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவினை அவர் செய்த சில காரியங்களை கொண்டு பலார் என பிக் பாஸ் வீட்டிலேயே அறைந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த பிரதீப் ஆண்டனி.இவர் ஒரு நடிகராக அறியப்பட்டாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு திகில் நிறைந்த அனுபவங்களை கொண்டிருக்கிறது.

இவருடைய சிறு வயதில் இவருடைய தந்தை இவருடைய தாயை எரித்துக் கொன்றிருக்கிறார். அதன் பிறகு குடித்து குடித்து தானும் இறந்திருக்கிறார். இப்படி பெற்றோரின் ஆதரவை இழந்த பிரதீப் தன்னுடைய சித்தியிடம் தான் வளர்ந்திருக்கிறார்.வளரும் பொழுது அவருடைய பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இருக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் பார்த்திருக்கிறார்.

லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்துள்ள இவர் தற்பொழுது சட்டம் படிக்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார்.

மட்டுமில்லாமல் இடையில் காதல் தோல்வியால் அவதிப்பட்டு வந்த இவர் மனநல பாதிப்புக்கும் ஆளாகி இருக்கிறார். இதற்கும் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடவடிக்கைகள் ஒரு நேரத்தில் இருப்பது போல மற்றொரு நேரத்தில் இருப்பது கிடையாது என சக போட்டியாளர்கள் புகார் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணு வேணும்-ன்னு கேட்டியாமே.. ஓ*** கேட்ட மூட்ரா..! – போட்டியாளரிடம் அதிரடி காட்டிய ஆண்டவர்..!

0

பிக் பாஸ் 7-வது சீசனில் கடந்த சில முன்பு பிக் பாஸ் போட்டியாளர் விஜய் நடிகரும் சக பிக் பாஸ் போட்டியாளருமான பிரதீப் ஆண்டனிடம் வம்பு வளர்த்தார்.

அவர் கூறியதாவது, நான் அமர்ந்து கொண்டிருக்கும்போது ஷூ எடுத்துச் சென்றீர்கள். அந்த ஷூ என் மீது தெரியாமல் பட்டுவிட்டது. நீங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்பது எனக்கு தெரியும்.ஆனால் எடுத்துச் செல்லும் பொழுது தவறலாக என் மீது ஷூ பட்டது. அப்போது அதற்கு நீங்கள் எந்த ஒரு மன்னிப்பும் கேட்காமல் சென்று விட்டீர்கள். இனிமேல் அது போல் நடந்தால் நான் அப்படி திரும்புவது போல திரும்பும் போது கைபட்டு மூக்கு உடைந்துவிட்டால் என்னை கேட்க கூடாது.

என்னை பிடித்தவர்கள் நிறைய பேர் வெளியே இருக்கிறார்கள். அவர்கள் கையில் நீங்கள் சிக்கினால் வேற மாதிரி ஆகிவிடும் என்று பெரிய வஸ்தாது போல பேசினார்.

இதனை கேட்ட சக பிக் பாஸ் போட்டியாளர்கள் உடனடியாக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.வார இறுதி நாளான இன்று நடிகர் கமல்ஹாசன் இதனை பற்றி பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, இதுபோல் நீங்கள் இனிமேல் பேசினால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள். உங்களுக்கு முதல் வார்னிங் என்று ஒரு ஸ்ட்ரைக் கொடுத்து இருக்கிறார்.

இதுபோல மூன்று ஸ்ட்ரைக் வாங்கினால் நீங்கள் நேரடியாக என்னிடம் வந்து விட வேண்டியது தான் என்று அதிரடி காட்டி இருக்கிறார்.

இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் பேசும் வசனமான என்னுடைய கண்ணு வேணும்ன்னு கேட்டியுமே..  ஓ** கேட்ட மூட்ரா.. என்ற காட்சி போல மாஸாக இருக்கிறது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.