“வாக்கிங் போது.. ஒரு நபர்.. அதுக்கு நேராக அதை வச்சி..” – ரெஜினா கூறிய பகீர் தகவல்..!

0
290

நடிகை ரெஜினா தலைக்கு நேர்ந்த தர்ம சங்கடமான அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஒரு நாள் காலையில் நான் வாக்கிங் சென்றிருந்தேன். அப்போது எனக்கு எதிரே ஒரு நபர் வாக்கிங் வந்து கொண்டிருந்தார்.அவர் தன்னுடைய மார்புக்கு நேராக போனை வைத்து என்னை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

முதல் ரவுண்டு வரும் பொழுது நான் கண்டுகொள்ளவில்லை. இரண்டாவது ரவுண்டு வரும்போதும் அதையே செய்தார் நான் கண்டுகொள்ளவில்லை.ஆனால் மூன்றாவது ரவுண்டு வரும்போது இதனை சும்மா விடக்கூடாது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை புகைப்படமோ, வீடியோவோ எடுப்பது தவறு என்று நான் என்னுடைய பாதுகாப்பிற்காக ரியாக்ட் செய்ய முயற்சி செய்தேன்.மூன்றாவது ரவுண்டு வரும்போது அவன் எங்கே இருக்கிறான் என்று தேடினேன்.

என் எதிரே வந்து கொண்டிருந்தான். நான் நேராக சென்று போனை பிடுங்கி விட்டேன். எதற்காக என்னை புகைப்படம் எடுக்கிறாய்..? எதற்காக என்னை வீடியோ எடுக்கிறாய்..? என்று கத்தினேன்.சுற்றி அனைவரும் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நபர் என்ன எனக்கு நெருக்கமாக வந்து நின்று எதற்காக என்னுடைய போனை பிடுங்கினீர்கள்..

நான் அப்படி எதுவும் செய்யவில்லை.. என்று என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அவருடைய வாசனையை என்னால் நுகர முடிகிறது அந்த அளவுக்கு என்னிடம் நெருக்கமாக வந்து நின்று கொண்டு பேசினார். அவருடைய உதடுகள் பேசுவதை பார்க்க முடிகிறது. இரண்டு நிமிடம் அவர் ஸ்தம்பித்துப் போய்விட்டார்..

நான் இப்படி ரியாக்ட் செய்வேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். எதற்காக நீங்கள் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் எடுத்த போட்டோ மற்றும் புகைப்படங்களை காட்டுங்கள் என்று கூறினேன்.

அதற்கு அவர் நான் எதற்காக உங்களிடம் காட்ட வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். நீங்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கிறீர்கள். இதனால் சும்மா விடமாட்டேன். என்று அவரை நான் வீடியோ எடுக்க ஆரம்பித்தேன்.

அதனை பொதுவெளியில் போட்டு இவர் யார் என்று தெரிகிறதா..? இவர் மீது புகார் கொடுங்கள் என்று சமூகவலைதளங்களில் பதிவு செய்யலாம் என யோசித்தேன். வீடியோவும் எடுத்து வைத்தேன்.

ஆனால் அதன் பிறகு என்னுடைய கோபம் பிறகு விட்டு விட்டேன் ஒருவேளை நான் அதனை வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தால், அது ஒரு பெரிய பேசு பொருளாக மாறி இருக்கும்.

எதிர்பார்க்காத சில விஷயங்கள் கூட நடந்து இருக்கலாம். அதனால், அந்த வீடியோவை நான் பதிவிடவில்லை என்று கூறியுள்ளார் ரெஜினா.