என் கணவரிடம் ஏமாந்துட்டேன்.. இன்னும் அது நடக்கல.. ரகசியம் உடைத்த சம்யுக்தா சண்முகம்..!

0
389

நாடிகையும் மாடல் அழகியமான சம்யுக்தா சண்முகம் சமீபத்தில் தன்னுடைய திருமணம் அதனை தொடர்ந்து நடைபெற்ற சிக்கல்கள் விவாகரத்து இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து இருக்கிறார்.

மாடல் அழகியாகவும் விளம்பர பல நடிகையாகவும் இருந்த சம்யுக்தா சண்முகம் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான காபி வித் காதல் வாரிசு உள்ளிட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் அவருடைய கணவர் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர், வாழ்க்கையில் ஒரு நல்ல வாழ்க்கை துணையை தேர்வு செய்தது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஆனால், நான் தவறான ஆளை தேர்வு செய்து விட்டேன்.என் கணவரிடம் ஏமாந்துட்டேன்..அவர் துபாயில் இருக்கிறார். ஏற்கனவே நான்கு ஆண்டுகள் வேறு ஒரு பெண்ணுடன் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த விஷயம் எனக்கு நீண்ட நாட்கள் தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் தெரியவந்த பிறகு நான் உடைந்து போய் விட்டேன்.அவரைப் பிரிந்து வந்து விட்டேன். நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். என்னுடைய குழந்தைக்கு அப்பா என்று யாரும் இல்லை. என்னதான் நான் பிஸியாக இருந்தாலும் கூட கார் ஓட்டும் பொழுது, இரவு தூங்கும் போது என கணவர் கொடுத்த ஞாபகங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

எதற்காக என்னை ஏமாற்றினார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா..? அவரிடம் ஒழுங்காக அன்பு செலுத்தவில்லையா..? பல கேள்விகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய குழந்தை அப்பா குறித்து கேட்டால்… அவர் வேலையாக இருக்கிறார்.. வெளிநாடுகளில் இருக்கிறார்.. வருவார் என்று சொல்கிறேனே தவிர எங்களுக்குள் இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்வதில்லை.

ஏனென்றால், அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் அவனுக்கு கண்டிப்பாக இருக்காது. ஒருவேளை மற்ற நண்பர்களின் அப்பாவை பார்க்கும் போது இவனுக்கு ஏதேனும் ஏக்கம் ஏற்படும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

இன்னும் அது நடக்கல..

அதனால் வெளிநாடுகளில் இருக்கிறார்.. வேலையில் இருக்கிறார்… வருவார்.. என்று சொல்லி வைத்திருக்கிறேன். இதுவரை எங்களுக்கு விவாகரத்து நடக்கவில்லை… சட்டப்பூர்வமான விஷயங்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதும் இல்லை.. அதற்கு தயாராகவும் இல்லை,.. காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு தவறான நபரை தேர்வு செய்துவிட்டால்.. வாழவும் முடியாது.. அதிலிருந்து வெளியே வரலாம் என்றால்.. அதுவும் கடினமான விஷயம்.. எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது மிகவும் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது என பதில் கூறியிருக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம்.