ஆணுறையில் ஓட்டை போட்ட இளம் நடிகை மது போதையில் விடிய விடிய கும்மாளம் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

கேரளா சினிமா துறையில் சிறு வேடங்களிலும் பின்னணி நடனங்களிலும் பணியாற்றி வந்த துணை நடிகை திவ்யா நாயரின் (பெயர் மாற்றப்பட்டது) வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள், ஒரு சினிமா கதையைப் போலவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காதல், உல்லாசம், திருமண கனவு, ஏமாற்றம் என அடுக்கடுக்கான சம்பவங்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தில் வெளியான உண்மைகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன.

இந்த சம்பவம் கடந்த 27ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.திவ்யா நாயர், கேரளாவைச் சேர்ந்த இளம் துணை நடிகை. அழகும், திறமையும் இருந்தபோதிலும், ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவின் பின்னணியிலேயே தவித்து வந்தார். ஒரு படப்பிடிப்பில் அவர் நடித்தபோது, அந்தப் படத்தின் தயாரிப்பாளரின் மகன் ரவி நாயருடன் (பெயர் மாற்றப்பட்டது) நெருக்கமானார்.

ரவியின் அழகில் மயங்கிய திவ்யா, அவருடன் காதல் உறவைத் தொடங்கினார். இருவரும் அடிக்கடி டேட்டிங், கார டிரைவ்கள், பார்ட்டிகள் என குதூகலமாகக் கழித்தனர். உல்லாச உறவுகளும் அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக மாறின.”ஹீரோயினாக இல்லை என்றால் என்ன? பெரிய பணக்காரக் குடும்பத்தில் மருமகளாகலாம்” என்ற கனவில் மூழ்கிய திவ்யா, ரவியிடம் திருமணத்தைப் பற்றி பேசியபோது அதிர்ச்சி அடைந்தார்.

“திருமணமா? நான் உன்னுடன் டைம் பாஸ் செய்கிறேன். இப்படி பழகக்கூடிய நடிகைகளுடன் திருமணம் செய்திருந்தால், 20 திருமணங்கள் செய்திருப்பேன்!” என்று கூறி, உறவை முடிவுக்கு கொண்டுவர முயன்றார் ரவி. இருப்பினும், திவ்யா அவரை விட்டு பிரிய மறுத்தார்.

செல்வந்தரான ரவியின் வாழ்க்கையை இழக்க மனமில்லை.இதனால் தவித்த திவ்யா, சக தோழிகளுடன் சதி தீட்டினார். “அடுத்த உல்லாசத்தில் ஆணுறையில் ஓட்டை போட்டு கர்ப்பமாகிவிடு. புகைப்படங்களும் எடுத்துக்கொள். அப்புறம் திருமணம் நிச்சயம்” என்று அறிவுறுத்தினர்.

திட்டம் படி, விசாகப்பட்டினத்தில் ஒரு பட வேலைக்காக சென்ற ரவியுடன் திவ்யா சென்றார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருவரும் மது அருந்தினர். மது போதையில் தனிமையில் இருந்தபோது, அவரது ஆணுறையில் ஓட்டை போட்டார். ஆனால், அன்று நடந்தது வேறு!

அடுத்த மாதமே கர்ப்பமான திவ்யா, ரவியிடம் “நீதான் காரணம்! தவறுதலாக கர்ப்பம் தரித்துவிட்டேன்” என்று அழுது கதறினார். ஆனால் ரவி ஏற்கவில்லை. “இரண்டு ஆண்டுகளாக உறவில் இருந்தாலும், கடைசியாக ஆணுறை அணிந்திருந்தேன். இது என் குழந்தையா.. இல்லை..?” என்று மறுத்தார்.

திவ்யாவின் தொலைபேசி அழைப்புகள், பஞ்சாயத்து முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன. கோபத்தில், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி “நீதான் என்னை கர்ப்பமாக்கினவன்! திருமணம் செய்” என்று அழுதார். ரவி உறுதியாக மறுத்ததால், விஷயம் காவல்நிலையத்தைத் தொட்டது.

நீதிமன்ற விசாரணையில் வெளியான உண்மைகள் சினிமாவை மிஞ்சின! திவ்யா, ரவியை திருமணம் செய்ய வைக்க, தனது கல்லூரி நண்பருடன் உறவில் ஈடுபட்டு கர்ப்பமானார். ஆனால், “இது ரவியின் குழந்தை” என்று பொய் கூறி அவரை ஏமாற்ற முயன்றதாகத் தெரியவந்தது.

அன்று விசாகப்பட்டினத்தில், ரவி, மது போதையில் இருந்த போதும் சேதமடைந்த ஆணுறையைக் கவனித்து, வேறு ஒரு ஆணுறையை பயன்படுத்தி உறவில் ஈடுபட்டதாக விசாரணையில் வெளியானது. “ஆணுறை ஓட்டை” திட்டமும் தோல்வியடைந்ததால், வேறு வழியில் சதி தீட்டியதாக விசாரணை அறிக்கை கூறுகிறது.

இதையடுத்து, திவ்யாவுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், சினிமா துறையில் சில இளம் நடிகைகள் சொகுசு வாழ்க்கைக்காக எவ்வளவு தாழ்ச்சியை அடைகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

“காதல் என்பது ஏமாற்றத்தின் முகமூடி ஆகலாம்” என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இந்த உண்மை சம்பவம், இடங்கள் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் சமூக சேவை அமைப்புகள்.

Check Also

கள்ளத் தொடர்புக்காக தோழிகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு! இரு குழந்தைகளின் தாயைச் சுற்றி பரபரப்பு!

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் ரகசியமாக வீடியோ பதிவு …