என்னை வற்புறுத்தி அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வைத்தார்கள்..! – முதல்வரின் பேத்தி பகீர் பேட்டி..!

0
632

காதல் மன்னன் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை மானு சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் மன்னன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

காதல் மன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கும் நடிகை மானுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தான்.இந்த படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

சிங்கப்பூரில் செட்டிலாகி விட்ட இவர் 16 ஆண்டுகள் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் மன்னன் படம் குறித்து பேசியுள்ளார்.அவர் பேசியதாவது, காதல் மன்னன் திரைப்படத்தில் நான் நடிக்க மறுத்தேன் எனவும் என்னுடைய குடும்பத்தில் யாருமே சினிமா துறையில் கிடையாது. என்னுடைய தாத்தா கோபிநாத் பட்டோலால் அசாம் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.

என்னுடைய குடும்பத்தில் அனைவரும் மருத்துவர்கள். படிப்பதற்காக தான் நான் சென்னை வந்தேன். அப்போது என்னுடைய பள்ளியில் படித்துக் கொண்டிருந்த விவேக் மற்றும் சரண் இருவரும் என்னை கட்டாயப்படுத்தி நடிகர் அஜித்துக்கு ஜோடியாக காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்கள்.

அந்த படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டேன் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஆனால், அவை எதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. படிப்பில் கவனம் செலுத்து தொடங்கினேன்.

பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். என்னுடைய கணவரும் ஒரு மருத்துவராக தான் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகை மானு. காதல் மன்னன் படத்தில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரை பலரும் திலோத்தமா என்று அடையாளம் கொண்டிருக்கின்றனர்.