ஆண்டவரே.. நவ் யுவர் டர்ன்..! – அடிப்படை கல்வி சர்ச்சை.. கமல்ஹாசன்-ஐ குறி வைக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்..!

0
264

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கலை காட்டி இருக்கிறது.முதல் வாரத்திலேயே விவகாரமான பஞ்சாயத்து ஒன்று பிக்பாஸ் வீட்டில் நடந்தேறி இருக்கிறது. இந்த பஞ்சாயத்திற்கு பஞ்சாயத்து தலைவர் கமல்ஹாசன் என்ன தீர்ப்பு கொடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

அது என்ன பஞ்சாயத்து என்றால்,.. அதுதான் கல்வி குறித்தான விவாதம். எனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நான் நம்பவில்லை என்று தற்குறித்தனமாக பேசும் ஜோவிகா ஒரு பக்கம்.

அடிப்படை கல்வி ஒரு 12-ஆம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும் உன்னுடைய நலம் விரும்பிகள் உன்னுடைய தாயாக இருந்தாலும் அதைத்தான் கூறுவார். நான் சொன்னதில் என்ன தவறு..? என்று வெள்ளந்தியாய் நிற்கும் நடிகை விசித்ரா மறுபக்கம்.

இதில் கூத்து என்னவென்றால் தற்குறித்தனமாக பேசக்கூடிய ஜோவிகாவிற்கு ஆதரவாக பல பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுடைய கைத்தட்டல்களை கொடுத்திருக்கின்றனர். ஒட்டு மொத்த பிக்பாஸ் வீடே தற்குறிகளின் கூடாரமாகி விட்டதா.. என்று புலம்புகின்றனர் ரசிகர்கள்.

படிக்காத மேதை காமராஜர் என்று கூறுகிறோம். ஆனால், அந்த காமராஜரே ஊர் முழுக்க பள்ளிகளை திறந்தது எதற்காக..? அடிப்படை கல்விக்காக பல ஆண்டுகள் போராடி அனைவருக்கும் கல்வி என்ற நிலையை எட்டி இருக்கும் இந்த காலத்தில் படிப்பு இருந்தால் தான் சாதிக்க முடியும் என்ற எதுவும் கிடையாது என்ற தற்குறித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் பணக்கார பெண்ணான ஜோவிகாவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒரு நடிகையின் மகள், மிகப் பெரிய சினிமா குடும்பத்தின் வாரிசு உங்களிடம் இல்லாத பணம் கிடையாது. பிரபலம் என்ற அடிப்படையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எளிமையாக கிடைத்துவிட்டது.

ஆனால் சாமானியர்களுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறது..? அவர்கள் படித்தால் தான் அவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.. ஒரு வேலை கிடைக்கும்.. ஒரு தொழிலை துவங்குவதற்கான அடிப்படை அறிவு கிடைக்கும்.. ஆனால் நீங்கள் படிக்காமல் முன்னேற முடியும் என்று சொல்லுவதற்கு எந்த நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்..? என்று ஜோவிகாவிற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஜோவிகாவின் இதே பேச்சை படிக்காமல் சாதித்த ஒருவர் பேசுகிறார் என்றால் அதனை காது கொடுத்து கேட்கலாம். ஆனால், தற்போது தான் 20 வயதாகும் ஒரு பெண் இப்படி மமதையில் பேசுவதை கேட்க காது கூசுகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசன் என்ன கூற போகிறார்…? என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வேறு எந்த பிக் பாஸ் போட்டியிலும் இல்லாத அளவுக்கு முதல் வாரமே இப்படி ஒரு பஞ்சாயத்து.. பலராலும் கவனிக்கப்படும் ஒரு பஞ்சாயத்து உருவாகி இருக்கும் சீசன் இந்த 7-வது சீசன் தான் என்று கூறலாம்.