எவனோ ஒரு தே**யா பையன்.. என்னை மாதிரி இருக்குறதுக்கு.. நான் என்னடி பண்ணுவேன்..! – லியோ கதை இதுதானா..?

0
314

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் கதையின் முக்கியமான விஷயங்கள் இடம் பெற்று இருக்கின்றது.

மேலும் கதை இப்படித்தான் இருக்கக்கூடும் என்ற கணிப்புகளும் இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கின்றது. லியோ திரைப்படத்தின் கதையை கட்டவிழிக்கும் விதமாக இரண்டு வசனங்கள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கின்றன.

முதல் வசனம் தன்னுடைய மனைவியான த்ரிஷாவிடம், யாரோ ஒரு தே**யா பையன்.. என்னை மாதிரி இருக்குறதுக்கு..  ஆள் ஆளுக்கு என்னை போட்டு உயிரை எடுத்தா.. நான் என்னடி பண்ணுவேன் என்று கோபம் கொப்பளிக்க விஜய் பேசுகிறார்.

ட்ரெய்லரின் இறுதியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதற்கு லியோதான் உயிரோடு வரவேண்டும் என்று கூறுகிறார்.

இதன் மூலம், லியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் விஜய் கதைப்படி இறந்து விடுவது போலவோ.. அல்லது சில காரணங்களுக்காக ஒளிந்து கொள்வது போலவோ.. அல்லது லியோவாக இருக்கும் தன்னுடைய பாதுகாப்பிற்காக தன்னைப் போலவே இருக்கும் இன்னொருவரை அவன் தான் லியோ  என கோர்த்து விட்டு தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கவோ.. என இரு வேறு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கலாம் என கணிக்க முடிகின்றது.

அப்படி இல்லையென்றாலும், ஒரு விஜய்-எ தன்னுடைய கடந்த காலத்தை மறந்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று பல்வேறு கணிப்புகள் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ஒரிஜினல் லியோ-வை விட்டுவிட்டு அவரை போலவே இருக்கும் அப்பாவியை குறி வைத்து திரியும் வில்லன்கள், உண்மையான லியோ என்ன ஆனார்..? உண்மையான லியோ-வுக்கும் அப்பாவி விஜய்க்கும் என்ன தொடர்பு என ஒரு வழியாக லியோ திரைப்படத்தின் பிளாட் என்ன என்று ரசிகர்களுக்கு தற்போது தெரிய வந்திருக்கிறது.

இத்தனை நாள் படம் எதைப் பற்றியது என்று தெரியாமல் புலம்பித் இருந்த ரசிகர்களுக்கு ஒரு சீரியல் கில்லர் மற்றும் லியோவாக இருக்கும் நடிகர் விஜய்.. அப்பாவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய்.. என சில விஷயங்கள் தற்போது தெரிய வந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எதிர வைத்திருக்கிறது என்று கூறலாம்.