யாருடா நீங்கலாம்.. வேற பொழப்பே இல்லையா..? – கொந்தளித்த எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..! – என்ன ஆச்சு..?

0
329

பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா யாருடா நீங்க எல்லாம் உங்களுக்கு வேற வேலையே இல்லையா..? என்று கோபமாக ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பதிவு செய்திருக்கிறார்.

எதனால் அப்படி பதிவு செய்திருக்கிறார் என்று பார்க்கலாம் வாருங்கள். நடிகை ஹரிப்பிரியா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடன் நடித்த சக நடிகர் விக்னேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அதனை தொடர்ந்து சில வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில் தான் தங்களுடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களுடைய விவாகரத்திற்கு காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் என்று கூறப்பட்டது.

ஆனால், இது குறித்து ஹரிப்பிரியா கூறுகையில் அசார் என்னுடைய சிறந்த நண்பர் அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்று பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் ஹரிப்பிரியா வயதான ஒரு நபருடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற ஒரு தகவலை யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதனை பார்த்து ஷாக்கான ஹரிப்ரியா யாருடா நீங்க எல்லாம்…? வேற பொழப்பே இல்லையா..? என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இந்த பதிவை எழுதி இருக்கிறார்.இதன் மூலம் தான் இரண்டாவதாக யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை கூறியிருக்கிறார் ஹரிப்பிரியா.