“16 வயசுல இப்படி நடக்கும்-ன்னு தெரிஞ்சிருந்தா…” – விஜய் ஆண்டனி மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..!

0
661

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரணைகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் மீரா என்றும் அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது.மீராவின் மரணம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் என்பது தான்.

கல்வி குறித்தும், தற்கொலை என்பது தவறான முடிவு என்றும் பல்வேறு தளங்களில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கும் விஜய் ஆண்டனியின் வீட்டில் இப்படி ஒரு சம்பவமாக என்று பலரும் வேதனை கொண்டார்கள்.இந்த விவகாரம் ஒட்டுமொத்த சினிமா உலகினரையும் உலுக்கியது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில், மீராவின் மறைவு குறித்து அவருடைய தாய் ஃபாத்திமா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

நீ 16 வயதில் இறந்து விடுவாய் என தெரிந்திருந்தால்.. உன்னை சூரியனிடமும் சந்திரனிடமும் காட்டாமல் என்னுடைய வைத்திருந்திருப்பேன்.. அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் திரும்பி வந்துடுமா… உனக்காக லாரா காத்துக் கொண்டிருக்கிறாள்.. என உருக்கமான வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உடைந்து போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இஒதனை தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறியும் இந்த நேரத்தில் நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.