பிக்பாஸ் வீட்டில் பண்ற வேலையா இது..? – இரண்டு போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ்..!

0
502

பிக் பாஸ் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று முதல் வாரத்தில் ரசிகர்களை கவர தவறியவர்கள் என்ற அடிப்படையில் இரண்டு போட்டியாளர்களுக்கு சிறை தண்டனை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேச வேண்டும். ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

ஆனால் சிலர் ஏன் வந்தோம் என்று கூட தெரியாமல், ஆள் எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியாமல், கூட்டத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை அக்ஷயா மற்றும் நடிகை வினுஷா ஆகிய இருவரையும் சிறையில் அடைத்து உத்தரவிட்டிருக்கிறார் பிக்பாஸ்.

இருவரும் எந்த பிரச்சினைகளும் தலையிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று பாதுகாப்பாக தங்களுடைய விளையாட்டை விளையாடி இருக்கிறார்கள். இது பிக் பாஸ் வீட்டில் தவறான ஒரு விஷயம்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் தங்களுடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும். தங்களுடைய பார்வையை அங்கே விளக்க வேண்டும்.

இப்படி இருக்கும் பொழுது யார் எப்படி போனால் என்ன… என்று வாரம் முழுதும் எஸ்கேப் ஆன இருவருக்கும் பிக்பாஸ் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.