முன்னணி இயக்குனருடன் பிரியங்கா மோகன்..! – பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!

0
280

நடிகை பிரியங்கா மோகன் குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழில் தான் டாக்டர் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

விரல் விட்டு எண்ணும் அளவிலான திரைப்படங்களில் தான் நடித்துள்ளார் என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக அறியப்படுகிறார்.

மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் ரங்கநாதன் பிரியங்கா மோகன் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, பிரபல நடிகர் நெல்சன் திலீப் குமாருடன் நடிகை பிரியங்கா மோகன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் இவரும் அவருடனே சென்று விடுகிறார்.

தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் நெல்சன் வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது குடும்பத்தில் ஒருவராக நடிகை பிரியங்கா மோகனும் சென்றிருக்கிறார்.

அந்த அளவுக்கு நெல்சன் குடும்பத்தினருடன் பிரியங்கா மோகன் நெருக்கமாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் பதிவிட்டு இருக்கிறார்.