முகம் முழுக்க..! – சக நடிகைகளை கழுவி ஊத்தும் நடிகை அகிலா..! – என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

0
250

நடிகர்கள் சிம்பு தனுஷ் சூர்யா விஜயகாந்த் அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகை அகிலா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர் மத்தில பிரபலமானார்.

சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 205 ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிக்க வந்தவர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நீங்கள் நடிக்க அறிமுகமானதிலிருந்து இந்த மீடியா துறையில் குறிப்பாக சின்னத்திரை சீரியல்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை அகிலா. அப்போதெல்லாம் சீரியலில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்றால் அந்த கதாபாத்திரமாகவே அதில் நடிக்கக்கூடிய நடிகர்கள் நடிகைகள் இருப்பார்கள்.

ரசிகர்களுக்கு அவர்களுடைய நிஜப் பெயரை விடவும் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் நினைவில் இருக்கும். பலரும் அவர்களுடைய கதாபாத்திரத்தின் பெயரை வைத்து தான் அவர்களை அழைப்பார்கள். அந்த அளவுக்கு சீரியலில் அந்த கதையில் அவர்கள் ஒன்றி நடிப்பார்கள்.

ஆனால் தற்பொழுது வரும் சீரியல்களில் எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்..? ஏன் இருக்கிறார்கள்..? என்று கூட தெரியவில்லை.

நிறைய மேக்கப் போட்டுக் கொண்டு அந்த காட்சிக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் முகம் முழுதும் மேக்கப் போட்டுகொண்டு இருக்கிறார்கள்.

தங்களை ஒரு பிரபலமாகவே நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு நடிகையாக தங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதை தாண்டி தங்களை ஒரு பிரபலம் என்று நிலை நிறுத்திக் கொள்வதை அவர்கள் விரும்புகிறார்கள் போல தெரிகிறது.

அப்படியும் சில நடிகைகள் சீரியல்களில் நல்ல அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார்கள் என்பதையும் நான் பார்க்கிறேன். அனைவரையும் நான் அப்படி சொல்லவில்லை. அந்த காலத்தில் வந்த சீரியல்களை விட இந்த காலத்தில் சீரியல்கள் ரசிகர்களை கவர முயற்சி செய்கின்றன. ஆனால் கவர முடிவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் எதற்காக ஒரு சீரியலில் இத்தனை கதாபாத்திரங்கள் இருக்கிறது என்று கூட ரசிகர்களுக்கு புரிவதில்லை.

இந்த மாற்றங்களை நான் கண்கூடாக பார்க்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை அகிலா. இவருடைய இந்த கருத்து குறித்து உங்களுடைய பார்வை என்ன..? என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்களேன்.