ஒன்னரை வருஷம் அவரை சைட் அடிச்சேன்.. கூச்சமே இல்லாமல் கூறும் பிரியா பவானி ஷங்கர்..!

0
370

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒன்றரை வருடம் ஒருவரை அவருக்கு தெரியாமலேயே சைட் அடித்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக மீடியா துறைக்குள் நுழைந்தவர்.

அதன் பிறகு சீரியல் நடிகையாக உருவெடுத்து தற்போது சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது பேட்டி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் யாரையாவது சைட் அடித்திருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்தவர் உடற்பயிற்சி கூடத்தில் ஒருவரை ஒன்றை வருடம் சைட் அடித்தேன். அந்த உடற்பயிற்சி கூடத்தில் ஒன்றை வருடம் நான் பயிற்சி செய்தேன்.

அப்போது அங்கிருந்து ஒருவரை சைட் அடித்தேன். மொத்தமாகவே அவரை ஒரு 10 முறைதான் பார்த்திருப்பேன். அவரிடம் நான் பேசவும் இல்லை. அவரும் என்னிடம் பேசவில்லை.

இப்படியே ஒன்றரை வருடம் கழித்து விட்டது. அதன் பிறகு வேறு ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து விட்டேன் என்று பேசியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஏற்கனவே கல்லூரி கால முதல் ராஜவேலு என்ற ஒருவரை காதலித்து வருவதாக கூறும் ப்ரியா பவானி சங்கர் உடற்பயிற்சி கூடத்தில் ஒருவரை சைட் அடித்தேன் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.