
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து ‘வா வாத்தியார்’ படம் வெளியாக உள்ளது. தற்போது அவர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்குப் பிறகு ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ‘கைதி 2’, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என லைன்அப்புகள் உண்டு. இதனிடையே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மம்மூட்டியின் ‘டாமினிங் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய கதை ஒன்றை எழுதி வருகிறார் கௌதம் மேனன்.இதற்கான கதையை ஜெயமோகனுடன் இணைந்து எழுதி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.