Tuesday, April 22, 2025
Homeசெய்திகள்பள்ளி ஆசிரியர்களும் சீருடை அணிய ராஜஸ்தான் அரசு திட்டம்.

பள்ளி ஆசிரியர்களும் சீருடை அணிய ராஜஸ்தான் அரசு திட்டம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில கல்வி அமைச்சக துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளதாவது: கல்வி துறை அமைச்சர் மதன் திலவர், வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் நேர்மறையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளார். இதன் மூலமாகத்தான் அவர்கள் வாழ்க்கையில் சரியான மதிப்பு மற்றும் கலாச்சாரங்களை கற்று உணர முடியும். இதனை உணர்ந்தே கல்வித் துறை அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரேமாதிரியான சீருடை அணியும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் விருப்பம்போல் உடையணிந்து பள்ளிக்கு வரமுடியாது. ஆசிரியர்களின் உடை மாணவர்களிடத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை மாற்றவே இந்த சீருடை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments