Saturday, April 19, 2025
Homeசெய்திகள்சென்னையில் தொடங்க இருக்கும் சுற்றுலா கப்பல் பயணம்.

சென்னையில் தொடங்க இருக்கும் சுற்றுலா கப்பல் பயணம்.

விசாகப்பட்டினத்தில் சுற்றுலா முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வரும் ஜுன், ஜூலை மாதங்களில் சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே 3 சேவைகள் சுற்றுலா கப்பல் இயக்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் புறப்படும் கப்பல் ஜூலை 2-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். இந்த கப்பல் அதே நாளில் விசாகப்பட்டினத்தில் புறப்பட்டு 4-ம் தேதி புதுச்சேரி சென்றடையும். மீண்டும் 4-ம் தேதி புதுச்சேரியில் புறப்பட்டு மறுநாள் 5-ம் தேதி சென்னை வந்தடையும்.

இரண்டாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 7-ல் சென்னையில் புறப்பட்டு 9-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். அதேநாளில் இங்கிருந்து புறப்பட்டு 11-ம் தேதி புதுச்சேரி சென்றடையும். பின்னர் அதேநாளில் புதுச்சேரியில் புறப்பட்டு 12-ம் தேதி சென்னை வந்தடையும்.

மூன்றாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 14-ல் சென்னையில் புறப்பட்டு 16-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். பிறகு அதேநாளில் இங்கிருந்து புறப்பட்டு 18-ல் புதுச்சேரி சென்றடையும். மீண்டும் அதே நாளில் புதுவையில் இருந்து புறப்பட்டு மறுநாள் 19-ம் தேதி சென்னை வந்தடையும்.

கார்டில்லா க்ரூஸ் நிறுவனம் சார்பில் இந்த சுற்றுலா கப்பல் இயக்கப்படும். இதற்கான கட்டண விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments