Saturday, April 19, 2025
Homeசெய்திகள்இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி.

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், இந்த தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்தியா.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியால் 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், விராட் கோலி 52 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 என்கிற சவாலான ரன்னை குவித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments