Saturday, April 19, 2025
Homeசெய்திகள்அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலம்.

அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலம்.

அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரைகளையும் விலக்கி நடைபெறும் ஜோதி தரிசனம் தொடங்கியுள்ளது.

தமிழ்க் கடவுளான முருகனுக்கு நடத்தப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபடுவர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ஆம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் மற்றும் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தைப்பூசத் திருவிழா, அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments