
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒரு இளைஞரின் வயிற்றில் இருந்து ரூ.300 மதிப்புள்ள 33 நாணயங்கள் மீட்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வயிற்று வலி இருப்பதாகக் கூறி அந்த நபர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு பரிசோதனையில் இளைஞரின் வயிற்றில் இருந்த நாணயங்களை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்தனர்.
ஜனவரி 31ஆம் தேதி பிலாஸ்பூரில் உள்ள குமர்வின் நகரில் இந்த சம்பவம் நடந்தது. வயிற்று வலி இருப்பதாக புகார் அளித்த 33 வயது நபரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதிக்க வந்த மருத்துவர் அங்குஷ் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். மேலும், எண்டோஸ்கோபியில் அவரது வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.