
நைஜீரியா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 குழந்தைகள் எரிந்து உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
நைஜீரியாவின் வட பகுதியான ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி, பள்ளியையும் தாக்கியது.
இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால், தீயில் கருதி 17 குழந்தைகள் உயிரிழந்தனர். இன்னும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் தீயில் கருகி குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.